Tsunami..!

ஆண்டவா!





ஆண்டவா!

இயற்கையை படைத்தாய்
அதற்கொரு
நியதியை வகுத்தாய்

கரையை அலைகள்
தழுவுமே என்றாய்
இயற்கையின் நீதியிது
இன்பமே என்றாய்

கரையைப் புயல்கள்
கடக்குமே என்றாய்
இயற்கையின் நீதியிது
பொறுத்துக்கொள் என்றாய்

சிற்றலைகளை கொண்ட
கரையினை கண்டு
உன்மழலைகள் சென்று
களித்தனர் நன்று

களித்தனர் களித்த வேளையிலே
மாண்டனர் மருண்டு சிலைபோலே
புயல் மட்டும் கரையை கடக்குமென்றாய்
இங்கு கடலே கரையை கடந்ததய்யா

நியதியை மீறியவள் கடல் அய்யா
நீதிமன்றத்தில் அவளை நிறுத்தய்யா
அடக்கம் வேண்டும் உனக்கென்று
அறிவுறை அவளிடம் சொல்லய்யா


For TSUNAMI relief efforts :

http://www.indianredcross.org/donation.html

http://www.udavumkarangal.org/tsunami.asp

https://secure.ga3.org/02/asia_earthquake04

Comments