தமிழ்நாட்டை முன்னேற்ற..! - கனவு 2: பரந்து விரிதல்

கல்லூரி படிப்புக்காக நான் சென்னை சென்றவன். படித்து முடித்து விட்டு சென்னையிலே வேலை செய்தேன். அப்போது என்னுடன் தங்கியிருந்த என்னுடைய ரூம் மேட்ஸ், மற்றும் பல நண்பர்கள் அனைவரும் என்னைப் போலவே வெளியூரிலிருந்து வந்தவர்கள் தான்.

இப்படி வந்தவர்களில் 99% பேர் சென்னையில் செட்டிலாகிவிட்டனர். ஏன்? சென்னையில் தான் வேலை வாய்ப்பு அதிகம்.





இவ்வளவு பெரிய தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு நிறைய உள்ள ஊர்கள் எத்தனை? ஒரு ஐந்து அல்லது ஆறு? மிஞ்சிப் போனால் ஒரு பத்து ஊர்கள்?

ஆக, சொந்தமாக விவசாய நிலபுலன்கள் உள்ளவர்கள் அல்லது சொந்தமாக வியாபாரம் செய்பவர்கள், இவர்களை தவிர மற்ற அனைவருக்கும் இந்த பத்து ஊர்கள் தான் கதி.

இதில் குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற ஊர்கள்தான் டாப் FOUR. பாவம் இந்த ஊர்கள். எத்தனை பேரைத் தாங்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் சுரக்க வேண்டும். வெளியூர்களிலிருந்து லாரியில் தண்ணீர் கொண்டு வருவதெல்லாம் சும்மா.

இதனை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக, பரவலாக இன்னும் ஒரு முப்பது ஊர்களை முதற் கட்டமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த முப்பதில் கிராமங்கள் ஐந்தாவது இருக்க வேண்டும். இந்த ஊர்களிலோ அல்லது இவைகளை சுற்றியிருக்கும் இடங்களிலோ மிக PLANNEDடா BUSINESS CITIES கட்ட வேண்டும். அங்கு பல வசதிகள் இருக்க வேண்டும். ஆனால் முக்கியமாக ஒன்று. இதற்காக விவசாய நிலங்களை அழிக்க கூடாது. எதிலும் BALANCE முக்கியம்.

பல பெரிய கம்பனிகளை இந்த இடங்களில் முக்கிய கிளைகளை ஆரம்பிக்க ஊக்குவிக்க வேண்டும். அதில் வேலை செய்பவர்களுக்கு நல்ல QUARTERS தங்குவதற்கு வேண்டும். அங்கங்கு நல்ல SHOPPING MALL கட்ட வேண்டும்.

இதனால் மக்கள் தொகை சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் மட்டும் ஒரேடியாகக் கூடாமல், பரவலாக பரந்து விரியும். தண்ணீர் பிரச்சினை தீரும்.

ஒரு பத்து வருடம் இந்த முப்பது ஊர்களை முன்னேற்ற செயல் திட்டம் வேண்டும். அடுத்த பத்து வருடங்களில் மற்றுமொரு முப்பது ஊர்கள் கொண்ட திட்டம் போடனும்.

ஐம்பதே வருடங்களில் நூற்றைம்பது BUSINESS CITIES தமிழ்நாட்டில் இருக்கும். அப்புறம் வறுமையாவது, திண்டாட்டமாவது? அப்படியென்றால் என்ன என்று நமது வருங்கால சந்ததியினர் கேட்பர்.

Comments

  1. மீண்டும் நல்ல எண்ணங்கள் சம்பத்.
    இப்போது பாருங்களேன்... நீங்கள் போன வருடம் கண்ட கனவு (என்னைப்பொருத்தவரை அது கனவல்ல) இப்போது நனவாகிக்கொண்டு வருகிறது. இப்ப்போது சென்னை என்பது போய்... செங்கல்பட்டு வரை சென்னையாகிவிட்டது. மஹிந்திரா சிட்டி இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சிறுசேரி பக்கம் என்று பல டவுன்ஷிப் வந்துகொண்டிருக்கிறது. இதுபோக ஹோசூர், கோவை, மதுரை, திருச்சியிலும் IT Corridor ஆரம்பிக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete

Post a Comment